(எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண சபை முறை நீக்கப்பட்டுள்ளதா இல்லையா என எமக்கு தெரியாது. என்றாலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாததால் மக்கள் பிரதிநிகள் இல்லாமல் பாரியளவில் நிதி மாகாண சபை மட்டத்தில் பரிமாறப்படுகின்றமை நல்லதில்லை. அதனால் அந்த நிதியை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதே உகந்தது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பில் மாகாண சபைத் தேர்தல் முறை நீக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாததால், பாரியளவிலான பணம் மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே மாகாண மட்டத்தில் பரிமாறப்பட்டு வருகின்றது.
மக்களின் பணம் இவ்வாறு பரிமாறப்படுவது நல்லதில்லை. அதனால் இந்த பணத்தை மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணத் தொகையை விரைவாக பெற்றுக் கொடுப்பதே மிகவும் உகந்தது. மாகாண சபைத் தேர்தலை பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொண்ட பின்பே நடத்த முடியுமாகின்றது.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டவரைபை தயாரிக்கும் குழுவின் அறிக்கை ஆரம்பாக கையளிக்க வேண்டும். அறிக்கை கையளிக்கப்பட்டால் அதனை கலந்துரையாடலுக்கு விடுவதாக கொள்கை விளக்க உரையின்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதனால் புதிய அரசியலமைப்பின் சட்ட வரைபு கிடைத்த பின்னர். அது தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், புதிய அரசிலமைப்பில் மாகாண சபை த்தேர்தல் முறையோ அல்லது வேறு எந்த விடயங்களானாலும் நீக்கப்பட்டுள்ளதா இல்லையா அல்லது அது தொடர்பில் சட்ட வரைபில் இருக்கின்றதா இல்லையா என்பது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.
புதிய அரசியலமைப்பு தயாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் குழு அதன் அறிக்கையை கையளித்த பின்னரே அது தொடர்பில் தெரிந்து கொள்ளலாம். என்றாலும் மாகாண சபைத் தேர்தல் இடம் பெறாததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்களின் நிதி பாரியளவில் மாகாண மட்டத்தில் பரிமாறப்படுவது நல்லதில்லை. அதனை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு கையளிப்பதே மிகவும் உகந்தது என்றார்.
No comments:
Post a Comment