வட மாகாணத்தில் சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காத அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளர்கள் மீது எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
வட மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை விசேட வேலைத்திட்டமாக கருதுவதற்கு பொலிஸ் மற்றும் பிரதேச சபையின் உதவியை ஆளுநர் கோரியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக காரைநகர் பிரதேசத்தில் மிகச் சிறந்த சுற்றுச் சூழலுக்குகந்த பாதுகாப்புத் திட்டங்களும், வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வடிகான் அமைப்புகளும், நெடுஞ்சாலைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து தற்போது செயலிழந்து காணப்படுகின்றது.
எனவே, வட மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான விசேட நிகழ்ச்சித் தொடர்களை எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்னர் தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறும், அது எவ்வாறு நடைப்பெறுகின்றது என்பதை தமக்கு தெரியப்படுத்துமாறும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காத வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளர்கள் மீது எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment