(ஜெ.அனோஜன்)
கடந்த வாரம் கட்டாரின், தோஹாவில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் இலங்கைத் தொழிலாளி அல்ல என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இன்று (31) உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல என்பதை கட்டார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை இலங்கைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த வாரம் தோஹா செய்திகள் தெரிவித்தன.
ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இது குறித்து ஆராயுமாறு பணிப்புரை விடுத்ததாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.
அதன்படி கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் கீர்த்தி முத்துக்குமாரன அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தகவலைச் சரி பார்த்துள்ளார்.
இதன்போதே உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல என்பதை கட்டார் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக கூறினார்.
No comments:
Post a Comment