இந்தியா உள்ளிட்ட 8 நாட்டு விமானங்களுக்கு தடை விதித்தது ஹொங்கொங் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

இந்தியா உள்ளிட்ட 8 நாட்டு விமானங்களுக்கு தடை விதித்தது ஹொங்கொங்

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் ஒமிக்ரோன் பரவுவதால் விமான சேவைகளுக்கு ஹொங்கொங் அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் ஒமிக்ரோன் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ளது ஹொங்கொங் அரசு.

இந்நிலையில் நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும், 2 வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment