BOI உறுப்பினர்களின் இராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்க மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 5, 2021

BOI உறுப்பினர்களின் இராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்க மறுப்பு

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களின் இராஜினாமாக்களை ஏற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை முதலீட்டுச் சபை, கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார் என்பதை அறிவிக்க விரும்புவதாக கூறியுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் அந்தந்த வாரிய உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்ட கடிதத்தில், நாட்டின் நலனுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், கொவிட் தொற்றுக்குப் பின்னரான பொருளாதார மாற்றத்திற்கு உதவுவதற்கும் அவர்கள் திறம்பட பங்களிப்பதால், அவர்கள் தொடர்ந்து சேவைகளை வழங்குவதை ஜனாதிபதி விரும்புவதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment