உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் ஜனாதிபதி விளாதிமிர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.
கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது பெரியளவில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும், போர் தளவாடங்கள், போர் வாகனங்கள் உட்பட 94,000 ராணுவ வீரர்களை எல்லைப் பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக, ஏற்கெனவே ரஷ்யாவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டித்திருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது.
இந்நிலையில், வரும் 7ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காணொலி காட்சியில் கலந்துரையாட உள்ளார்.
அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, விளாதிமிர் புதினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment