கொவிட்–19 நோயால் ஏற்பட்ட இழப்புகளுக்காக சீனாவிடமும் உலக சுகாதார அமைப்பிடமும் இழப்பீடு கோருவோரின் பட்டியலில் மெக்சிகோ குடிமக்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
எவ்வளவு இழப்பீடு கிடைத்தாலும் உயிரிழந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்றாலும் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக அந்தக் கோரிக்கையை விடுப்பதாகத் தமது மகளைப் பறி கொடுத்த ஒருவர் கூறினார்.
போனஸ் எயர்ஸைச் சேர்ந்த சர்வதேச சட்ட அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள சட்டக் கோரிக்கைப் பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார்.
சீனா, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் கவனமின்மையால் வைரஸ் பரவல் நேர்ந்ததாக அந்த அலுவலகப் பிரதிநிதி குற்றஞ்சாட்டினார்.
மில்லியன் கணக்கான டொலர் இழப்பீடு கோரும் அந்தக் கோரிக்கை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பிரகடனம் மீறப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 800,000 டொலர் இழப்பீடு வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment