எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை விட நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அவசியம் - லசந்த அழகியவன்ன - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை விட நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அவசியம் - லசந்த அழகியவன்ன

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பான சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால் விநியோக கட்டமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை விட நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சமையல் எரிவாயு விநியோகம் தற்போது முறையான ஒழுங்குப்படுத்தலுக்கமைய முன்னெடுக்கப்படுகிறது.

இரண்டு பிரதான நிறுவனங்கள் நாட்டுக்கு கொண்டு வரும் எரிவாயுவின் கலவை முறையான பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதியுடன் எரிவாயு விநியோக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கனை தொடர்ந்து பாதுகாப்பான சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால் எரிவா யு சிலிண்டர் விநியோக கட்டமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை காட்டியும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் துரிதகரமான நடவடிக்கையினை தற்போது மேற்கொண்டுள்ளது.

சிலிண்டரின் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் விநியோக கட்டமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையில் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கான கேள்வி உயர்மட்டத்தில் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் 180,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் நுகர்வோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு கவலையடைகிறோம் என லிட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment