இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமாவுக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தொலைபேசி இலக்கத்தை மாற்றாது வலையமைப்பை மாற்றும் வசதி (Number Portability) மற்றும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி இலங்கைக்கு அதிவேக இணைய சேவை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) பணிப்பாளர் நாயகமாக, ஓஷத சேனாநாயக்க கடந்த 2019 நவம்பர் 19ஆம் திகதி, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment