ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானமில்லை - அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானமில்லை - அமைச்சர் திலும் அமுனுகம

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலையதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் ரயில் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் மிக கஷ்டமான நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் உடனடியாக ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கு 17 வீதமாக பஸ் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. 

எனினும் எந்தக் காரணங்களுக்காகவும் ரயில் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ்செல்வநாயகம்

No comments:

Post a Comment