தான் பெற்ற ஐந்து பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது.
வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் 2 - 12 வயதிற்குட்பட்ட 5 பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு குறித்த தாய் (வயது 38) தனது காதலனுடன் சென்றுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 5 பிள்ளைகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் கையேற்றுள்ளனர்.
இந்த நிலையில் 38 வயதுடைய தாயாருக்கு 35 வயதுடைய நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில் தனது 2 பெண் பிள்ளைகளையும், 3 ஆண் பிள்ளைகளையும் அந்த பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் தனியாக விட்டுவிட்டு அவர் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட பிள்ளைகள் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த பிள்ளைகளின் தந்தை அதிகளவில் மதுபானத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment