ஸ்கொட்லாந்து சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் இடம்பெற்ற COP26, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்தார்.
குறித்த மாநாடு ஒக்டோபர் 31ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் இடம்பெறுவதோடு, நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் இடம்பெற்ற உலகத் தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றி உரையாற்றியிருந்ததோடு, பல்வேறு அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment