தாய்வான் ஜனாதிபதியுடன் அமெரிக்க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு : கடும் அதிருப்தியில் சீனா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

தாய்வான் ஜனாதிபதியுடன் அமெரிக்க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு : கடும் அதிருப்தியில் சீனா

தாய்வான் - சீனா இடையிலான மோதல் நீடித்து வருகிறது. தாய்வானை இணைப்பதில் சீன அரசும், சீனாவுக்கு அடிபணிய மாட்டோம் என தாய்வானும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.

தாய்வான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீன அரசு, ஊடுருவி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 5 எம்பிக்கள் திடீர் பயணமாக நேற்றுமுன்தினம் தாய்வான் வந்தனர். நேற்று காலையில் தாய்வான் ஜனாதிபதியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தாய்வானுடனான அமெரிக்க உறவு மிகவும் வலுவானது மற்றும் உறுதியானது என தாய்வான் வந்துள்ள அமெரிக்க எம்பிக்களில் ஒருவரான மார்க் டகானோ கூறி உள்ளர்.

இந்த ஆண்டில் அமெரிக்க எம்பிக்கள் தாய்வானுக்கு மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தாய்வான் திணறியபோது, தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்காக அமெரிக்க எம்பிக்கள் தாய்வான் வந்தனர்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும்படி தாய்வான் அரசுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment