ஏப்ரலில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் கலவையில் மாற்றம் - சபையில் பல விடயங்களை வெளிப்படுத்தினார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

ஏப்ரலில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் கலவையில் மாற்றம் - சபையில் பல விடயங்களை வெளிப்படுத்தினார் முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இருந்துவருகின்றது. அது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என அமைச்சர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் நிலை நாட்டில் ஏற்பட்டுவருவது தொடர்பாக பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) ராஜாங்க அமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்தியதனை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் களவையின் அளவில் மாற்றம் செய்திருப்பது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் 12.5 காஸ் சிலிண்டர் ஒன்றில் இருக்க வேண்டிய இரசாயன அளவு தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த, நுகர்வோர் அதிகார சபையில் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் ப்பிராேடன் 20 வீதமும் பூடென் 80 வீதமும் இருக்க வேண்டும் தெரிவித்திருக்கிறார். இந்த கடிதம் கடந்த ஏப்ரல் 24ஆம் அனுப்பப்பட்டதாகும். ஆனால் நுகர்வோர் அதிகார சகையினால் இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இரசாயன கூறுகள் இரண்டும் 50,50 என உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இதன் அளவை மாற்றம் ஏற்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கின்றது. இது பாரிய மோசடி அளவையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது.

அதனால் அதிகாரிகள் ஊடகங்களுக்கு முன்வந்து இது தொடர்பாக பொய் தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்ய வேண்டும். ஏனெனில் இவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment