போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியில் 145.3 தொன் கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் விளைவாக இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளது.
இதுவரை நடந்த மீட்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அதிக அளவிலான கொக்கெய்ன் தொகை இதுவாகும்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்த இந்த விசேட நடவடிக்கையின் போது வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 575 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 66 தொன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து 545 தொன்களுக்கும் அதிகமான கொக்கெய்ன் மற்றும் 224 தொன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என கொலம்பியாவின் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment