வெலிசறை விபத்து : வாகனத்தை செலுத்திய சிறுவன், உரிமையாளரான தந்தைக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

வெலிசறை விபத்து : வாகனத்தை செலுத்திய சிறுவன், உரிமையாளரான தந்தைக்கு விளக்கமறியல்

வெலிசறை, மஹாபாகே பகுதியில் நேற்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதான 16 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது தந்தைக்கு நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (05) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்திச் சென்ற சிறுவன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மேலும் சில வாகனங்களுடன மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான CCTV காட்சிகள்

No comments:

Post a Comment