எரிவாயு விலை அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது : செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

எரிவாயு விலை அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது : செந்தில் தொண்டமான்

எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான், ஆடம்பர பொருட்கள், விமானக் கட்டணங்களின் விலைகள், வாகன வரிகள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றின் செலவீனம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டால் இதன் தாக்கத்தை பொருளாதார ரீதியாக உயர்வானர்களே எதிர்கொள்ள நேரிடும். ஆனால், எரிவாயுவின் விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளமை சாதாரண பாமர மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

அவர்களுக்கு இந்த இமாலய விலை அதிகரிப்பை ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது. பொது முடக்கம் காரணமாக தினக்கூலி வேலையில் ஈடுபட்டவர்கள் தொழில் இன்றி பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மேலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இந்த நவீன காலத்தில் மக்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாடானாது பாமர மக்கள் சாதாரணமாக வாழ ஏற்புடையதாக இருக்க வேண்டும். மக்கள் சுமைகள் இன்றி சுமுகமான வாழ்க்கை முறையை வாழக்கூடிய நிலைப்பாடு காணப்பட வேண்டும். ஆகவே, உடனடியாக இந்த விலை அதிகரிப்பை இரத்து செய்ய வேண்டுமெனவும் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment