நடிகர் ஷாருக்கானின் மகன் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 28, 2021

நடிகர் ஷாருக்கானின் மகன் பிணையில் விடுதலை

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன், ஆர்யன் கான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

23 வயதான ஆர்யன் கான் கடந்த 3 ஆம் திகதி சொகுசு கப்பலில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் போதை ப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரது வழக்கு இன்று (28) மும்பை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, ஆர்யன் கான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் பிணை வழங்கக் கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் பிணை மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதன் பின்னர் பிணை வழங்கக் கோரி மும்பை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். ஆர்யன் கான் சார்பில் சட்டத்தரணி முகுல் ரோகத்கி வாதாடினார்.

மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆர்யன் கானுக்கு இன்று பிணை  வழங்கி மும்பை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

No comments:

Post a Comment