கொவிட் சட்டவிதிகளை மீறினால் பள்ளி நிர்வாகம் பதவி நீக்கப்படும் : பொலிஸார் ஊடாக வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்படுவர் என்கிறது வக்பு சபை - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

கொவிட் சட்டவிதிகளை மீறினால் பள்ளி நிர்வாகம் பதவி நீக்கப்படும் : பொலிஸார் ஊடாக வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்படுவர் என்கிறது வக்பு சபை

கொவிட்19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் சட்ட விதி­க­ளையும், வக்பு சபையின் வழி­காட்­டல்­க­ளையும் மீறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு ஒரு போதும் மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அவ்­வா­றான நிர்­வா­கிகள் உடன் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­துடன் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். அத்­தோடு கொவிட் சட்­டதிட்­டங்­களை மீறி­ய­மைக்­காக பொலி­ஸா­ரினால் வழக்கு தொட­ரப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என வக்பு சபை அறி­வித்­துள்­ளது.

கொவிட்19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் சுற்று நிருபம், புத்­த­சா­சன மற்றும் மத­ வி­வ­கா­ரங்கள் அமைச்சின் சுற்று நிருபம் மேலும் வக்பு சபையின் வழி­காட்­டல்­களை மீறி கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ கூட்டுத் தொழுகை நடாத்­திய வவு­னியா நகர் பள்­ளி­வாசல் மறு அறி­வித்தல் வரை மூடப்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

ஜும்ஆ கூட்டுத் தொழு­கைக்கு அனு­ம­தி­ய­ளித்த வவு­னியா நகர் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை பதவி நீக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், புதிய நிர்­வாக சபை­யொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார். 

பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொட­ரு­வ­தற்கு பொலி­ஸாரும், சுகா­தா­ரத் ­து­றை­யி­னரும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதேவேளை கிழக்கு மாகா­ணத்தின் சில பள்­ளி­வா­சல்­களில் மீலாதுன் நபி மெள­லூது ஓதும் நிகழ்வு இடம்­பெற்­ற­தை­ய­டுத்து பொலி­ஸாரும், பொது சுகா­தார அதி­கா­ரி­களும் அந்­நி­கழ்­வு­களை தடை ­செய்து சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த வக்பு சபையின் தலைவர் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான அறிக்­கையை பொலி­ஸா­ரிடம் கோரி­யுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் கூறினார்.

பொலி­ஸா­ருக்கும், பொது சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்கும் கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து பொலி­ஸாரும், சுகா­தார துறை­யி­னரும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வவு­னியா நகர் பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழுகை இடம்­பெற்­ற­போது திடீர் சோதனை நடாத்­தினர். அச்­சந்­தர்ப்­பத்தில் பள்­ளி­வா­சலில் சுமார் 75 பேர் தொழு­கைக்­காக ஒன்று கூடி­யி­ருந்­தனர்.

பள்­ளி­வா­சலில் கூட்­டுத் ­தொ­ழு­கைகள் தடை ­செய்­யப்­பட்­டி­ருப்­பதால் பொலிஸார் கூடி­யி­ருந்­த­வர்­க­ளையும், நிர்­வா­கத்­தி­ன­ரையும் எச்­ச­ரித்­தனர். 

மறு­தினம் ‘சனிக்­கி­ழமை’ மறு­ அ­றி­வித்தல் வரை பள்­ளி­வாசல் மூடப்­பட்­டி­ருப்­ப­தாக அங்கு அறி­வித்தல் ஒட்­டப்­பட்­டது. தொடர்ந்தும் பள்­ளி­வாசல் மூடப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ஒரு­வரை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். 

‘பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒன்று கூடி­ய­வர்­களின் பெயர் விப­ரங்­களை பொலிஸார் தரு­மாறு கோரி­னார்கள். அவர்­க­ளுக்கு பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டு­மென்­றார்கள்.

தொழு­கைக்­காக வருகை தந்­த­வர்கள் தமது விப­ரங்­களைப் பதி­வ­தற்கு பள்­ளி­வா­சலில் பதி­வேடு ஒன்று பேணப்படாமை கார­ண­மாக அந்த விப­ரங்­களை வழங்க முடி­யாது என நாங்கள் தெரிவித்தோம். அவ்வாறான விபரங்களை கையளித்தால் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீளத் திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்றார்கள்.

இதேவேளை கொவிட்19 வைரஸ் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் நாட்டின் சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனவும் வக்பு சபையின் தலைவர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களையும் கோரியுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment