தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், குற்றத் தடுப்பு மற்றும் போக்கு வரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினராக கடந்து ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment