நீச்சல் தடாகத்தில் நீராடிய 6 வயது சிறுமி மரணம் : பாசிக்குடா சுற்றுலா விடுதியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

நீச்சல் தடாகத்தில் நீராடிய 6 வயது சிறுமி மரணம் : பாசிக்குடா சுற்றுலா விடுதியில் சம்பவம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் நேற்று (8) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி - ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment