ஒக்டோபர் 15 முதல் புகையிரத போக்கு வரத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

ஒக்டோபர் 15 முதல் புகையிரத போக்கு வரத்து

சுகாதாரத் துறையின் வழிகாட்டல்கள் மற்றும் போக்கு வரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் புகையிரத போக்கு வரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07) ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரத பாதை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்ட புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment