Pulse Oximeter இற்கு உச்சபட்ச சில்லறை விலையாக ரூ. 3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜயசுமண இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று கொண்டவர்களின் குருதியிலுள்ள ஒட்சிசனின் செறிவு மற்றும் நாடித் துடிப்பை அளக்க Pulse Oximeter கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
விரலில் வைத்து அதிலிருந்து வரும் ஒளிக்கீற்றின் மூலம் உடனடியாக இவ்வளவீட்டை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் பரவலின் உக்கிரத்தை தொடர்ந்து, தற்போது Oximeter கருவிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதோடு, தரமில்லாத சாதனங்களும் விற்பனை செய்யப்படுவதாக, முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment