பாராளுமன்றம் அடுத்த வாரம் இரு நாட்களுக்கு மாத்திரம் கூடும் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

பாராளுமன்றம் அடுத்த வாரம் இரு நாட்களுக்கு மாத்திரம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் வாரம் இரண்டு நாட்கள் மாத்திரமே கூட தீர்மானிக்கப்பட்டள்ளது.

இன்று (02) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயம் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, செப்டெம்பர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் மாத்திரமே பாராளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (06) விசேட பாராளுமன்ற தினமாக, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அத்தியாவசிய உணவு சேவைகளை நடாத்திச் செல்வது தொடர்பில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள் தொடர்பில் அன்றையதினம் விவாதிக்க தீர்மானித்துள்ளதாக, அவைத் தலைவர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) பல்வேறு சட்டமூலங்கள் விவாதித்திற்காக எழுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment