இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், அவ் ஆபாச காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு அவர்களை நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்த நிலையிலேயே, இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்ப்ட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மஹரகமை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் புகைப்பட கலைஞர் ஒருவரும் எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பண்ணிபிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயது அழகுக் கலை நிலைய ஊழியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இளஞர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், யுவதி தொற்றாளர் ஒருவரின் தொடர்பாடல் வட்டத்துக்குள் உள்ளடங்குபவர் என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வாறு அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment