(எம்.ஆர்.எம்.வசீம்)
சதொச நிறுவனம் ஊழல் நிறைந்த திருட்டுக் குகை. அதன் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சதொச நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. சதொச என்பது ஊழல் மோசடிகள் நிறைந்த பெரும் குகை.
அதனால் இதன் மோசடிகளை இல்லாமலாக்கி, இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும்போது தாங்கிக் கொள்ள முடியாத சிலர் எமக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அதன் ஒரு நடவடிக்கைதான் நுகர்வோர் தொடர்பான அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரின் குற்றச்சாட்டுக்கள். அவரின் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment