(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள சில வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்படாமல் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள சடலங்களை உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கமைய துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைள் போன்ற வெவ்வேறு காரணிகளுக்காக சில சடலங்களை வைத்தியசாலைகளிலிருந்து அப்புறப்படுத்த முடியாமலுள்ளது. அவை தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்தி, அவற்றை அப்புறுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
ஒன்றிணைந்த அரச சேவை தாதியர் சங்கத்துடனான சந்திப்பின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இது தொடர்பில் ஆராயுமாறு அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு தேங்கியிருந்த சடலங்களில் சில அண்மையில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதோடு, தற்போது எஞ்சியுள்ள சடலங்களையும் அவ்வாறே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment