கறுப்பு பூஞ்சை தொற்று நோய் அல்ல, சுற்றுச் சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது, உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

கறுப்பு பூஞ்சை தொற்று நோய் அல்ல, சுற்றுச் சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது, உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

கறுப்பு பூஞ்சை என்பது தொற்று நோய் அல்ல. அது சுற்றுச் சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானோர் இந்நோய்க்கு உட்படுவார்களாயின் அவர்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கறுப்பு பூஞ்சை நோய் நுரையீரலில் கூட ஏற்படக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடும். எனினும் இது ஒரு தொற்று நோய் அல்ல. சுற்று சூழலில் காணப்படுகின்ற வைரஸ் ஊடாகவே இந்நோய் பரவும்.

மாறாக மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக் கூடிய நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் மருந்துகள் மூலம் அவர்களை குணப்படுத்த முடியும். எனினும் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற அல்லது குறைவானோர் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

கொவிட் வைரஸ் இதில் தாக்கம் செலுத்தவில்லை. அத்தோடு இலங்கையில் இதுவரையில் மிகக் குறைந்தளவானோரே கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment