எஞ்சியுள்ள IPL போட்டிகளில் விளையாட ரோயல் சலேஞ்சர்ஸ் அணியில் வணிந்து, துஷ்மந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

எஞ்சியுள்ள IPL போட்டிகளில் விளையாட ரோயல் சலேஞ்சர்ஸ் அணியில் வணிந்து, துஷ்மந்த

சகல துறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய கேன் ரிச்சரட்சன், சுழற்பந்து வீச்சாளர் அடம் சம்பா ஆகியோர் விலகியதோடு, டேனியல் சேம்ஸும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நியூஸிலாந்து அணியைச் சேர்ந்த பின் அல்லன், ஸ்கொட் குக்கலஜின் ஆகியோர் அந்நாட்டு அணியில் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும், துஷ்மந்த சமீரவையும், வணிந்து ஹசரங்கவையும் இணைக்க ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் இன்று (21) முடிவு செய்துள்ளனர்.

இது தவிர, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ரிம் டேவிட்டும் ரோயல் சலேஞ்சர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்.

No comments:

Post a Comment