(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் பாரிய நிலைமை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அனுபவிக்க நேரிடலாம் என வைரஸ் தொடர்பான உலக முன்னணி பேராசிரியரான மலிக் பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய விஞ்ஞான அறக்கட்டளை நிகழ்வொன்றில் நேற்று இணைய வழியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. எதிர்வரும் சில வாரங்களில் அது இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.
பொது சுகாதார நிபுணராக நான் இவ்வாறு எச்சரிக்கை விடுக்காவிட்டால், நான் எனது பொறுப்பை தட்டிக்கழித்ததாக ஆகிவிடும்.
அத்துடன் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மிகவும் வேகமாக மேற்கொள்வதையிட்டு நான் அரசாங்கத்துக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment