இலங்கைக்கு ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்தியாவின் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஒட்சிசனை ஏற்றும் நடவடிக்கை நேற்று இரவு ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
அதன்படி, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 தொன் மருத்துவ ஒட்சிசன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பலில், இந்த ஒட்சிசன் ஏற்றப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவிடம் இலங்கை 100 தொன் மருத்துவ ஒட்சினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இவ்வாறு முதல் கட்டமாக 40 தொன் ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment