ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment