ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட புதிய குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட புதிய குழு நியமனம்

நூருல் ஹுதா உமர்

நாட்டின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் புதிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில் துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர்.பி.கஹலிய ஆராச்சி, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச, திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி..எம்.சி. திலகரத்ன, சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஆர்.யூ.எஸ்.கே.ரத்னாயக்க, ஊவா வெல்லச பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜே.எல்.ரத்னசேகர, இராஜாங்க அமைச்சின் செயலாளர் தீபா லியனகே மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தவிசாளர் ஒஷத சேனாநாயக்க ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment