கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணுங்கள் : அமைச்சு அதிகாரிகளுக்கு டக்ளஸ் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணுங்கள் : அமைச்சு அதிகாரிகளுக்கு டக்ளஸ் பணிப்பு

கடற்றொழில் அமைச்சின் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (30.08.2021) நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற களப்பு அபிவிருத்தி பணிகள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், குலைகள் போட்டு கணவாய் பிடித்தல் , முரல் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகளுக்கான நிபந்தனைகள், கரைவலைத் தொழில் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சமூர்த்தி நிதி பங்களிப்புடன் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், இவை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் துறைசார் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment