முஸ்லிம் அமைப்புகள் மீதான தடை : மீள் பரிசீலனை செய்யப்படுமா ? - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

முஸ்லிம் அமைப்புகள் மீதான தடை : மீள் பரிசீலனை செய்யப்படுமா ?

“அகில இலங்கை ஐம்­இய்­யது அன்­சாரிஸ் சுன்­னதுல் முஹம்­ம­திய்­யா­வினால் (JASM) வழங்­கப்­பட்ட அநாதை பரா­ம­ரிப்பு நிதி­யு­தவி இடை­நி­றுத்­தப்­பட்­ட­மை­யினால் எனது பிள்­ளை­களின் கல்விச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க மிகவும் சிர­ம­மாக உள்­ளது. இதனால் எமது பிள்­ளை­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது” என்­கிறார் கொழும்பு-14 கிரோண்ட்பாஸ் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 41 வய­தான பாத்­திமா பர்­சானா.

மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்­ளை­களின் தாயா­ரான இவ­ரது கணவர் சிறு­நீ­ரக நோய் கார­ண­மாக கடந்த 2012ஆம் ஆண்டு கால­மானார். இத­னை­ய­டுத்து தையல் தொழில் மேற்­கொண்டு இவர் குடும்­பத்­தினை பரா­ம­ரித்து வரு­கின்றார். எனினும் கொவிட் மூன்­றா­வது அலை­யினை அடுத்து இவ­ரது தொழில் முற்­றாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் எந்­த­வித வரு­மா­னமும் இந்த குடும்­பத்­திற்கு கிடைப்­ப­தில்லை.

சுமார் 1.5 பேர்ச் அள­வு­டைய காணித் துண்­டொன்றில் அறை­யொன்று கூட இல்­லாது நிர்­மா­ணிக்­கப்­பட்ட சிறிய வீட்­டி­லேயே இந்த குடும்பம் வாழ்ந்து வரு­கின்­றது.

கடந்த 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து JASM இன் ‘அநா­தைகள் பரா­ம­ரிப்பு’ திட்­டத்தின் கீழ் பர்­சா­னாவின் மூன்­றா­வது மகள் நிதி­யு­தவி பெரு­கின்றார். ஆரம்­பத்தில் ஒருமுறை 7,000 ரூபா பெற்ற குறித்த சிறுமி இறு­தி­யாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் பல மாதங்­க­ளுக்­கு­ரிய பணத்தைச் சேர்த்து மொத்­த­மாக 45,000 ரூபா பெற்­றுள்ளார்.

“ஒரு வரு­டத்தில் இரண்டு அல்­லது மூன்று தட­வை­களில் எனது மக­ளிற்­கான நிதி கிடைக்கும். இந்த நிதி­யினை அனைத்து பிள்­ளை­களின் கல்விச் செல­விற்­கா­கவும், குடும்பத் தேவை­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­துவேன். தற்­போது இந்த அமைப்பு தடை செய்­யப்­பட்­டுள்­ள­மை­யினால் அவர்கள் நிதி­யு­த­வி­யினை நிறுத்­தி­ விட்­டனர். இதனால் மிகவும் கஷ்­ட­மாக உள்­ளது” என அவர் தெரி­வித்தார்.

இந்த நிதி­யு­தவி நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் எங்­களைப் போன்ற பல தேவை­யு­டைய குடும்­பங்கள் இன்று அநா­த­ர­வாக்­கப்­பட்­டுள்­ளன என பர்­சானா மேலும் கூறினார்.

இது போன்ற சுமார் 1,100 அநாதை பிள்­ளை­க­ளுக்கு பரா­ம­ரிப்பு நிதி­யு­தவி வழங்கி வந்­த­தாக JASM அமைப்பு கூறு­கி­றது.

முஸ்லிம் அமைப்­புக்கள் மீதான தடை
11 அமைப்­புக்கள் கடந்த ஏப்ரல் 13ஆம் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்ட விசேட வர்த்­த­மா­னியின் ஊடாக தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

தடை­செய்­யப்­பட்ட அமைப்­புக்­களின் விபரம்
01.அகில இலங்கை ஐம்­இய்­யது அன்­சாரிஸ் சுன்­னதுல் முஹம்­ம­திய்யா (JASM)

02.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)

03.ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)

04.ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (SLISM)

05.ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)

06.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)

07.தாருல் அதர் அல்­லது ஜாமிஉல் அதர் பள்­ளி­வாசல்

08.சேவ் த பேர்ள்ஸ்

09.ஈராக் மற்றும் சிரியா இஸ்­லா­மிய அரசு

10.அல்­கைதா அமைப்பு

11.சுப்பர் முஸ்லிம்

இவ்­வாறு தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­களில் JASM மற்றும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் ஆகி­யன நீண்ட வர­லாற்­றினைக் கொண்ட அமைப்­புக்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

JASM
அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல் பகரி என்­ப­வ­ரினால் 1947ஆம் ஆண்டு குரு­நாகல் மாவட்­டத்தின் பற­க­ஹ­தெ­னியா கிரா­மத்தில் இந்த அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

இந்த அமைப்பின் தலை­வ­ராக 1983ஆம் ஆண்டு முதல் தடை செய்­யப்­படும் வரை அஷ்ஷெய்க் என்.பீ.எம். அபூ­பக்கர் சித்தீக் செயற்­பட்டு வந்தார்.

ஏற்­க­னவே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்தில் பதி­வு­ செய்­யப்­பட்­டி­ருந்த இந்த அமைப்பு, கடந்த 2005.06.02ஆம் திகதி கம்­பனி பதி­வாளர் திணைக்­க­ளத்தில் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்ட கம்­ப­னி­யாக பதி­வு­செய்­யப்­பட்­டது.

இதற்கு மேல­தி­க­மாக 2009ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க சட்­டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு ஒக்­டோபர் 21ஆம் திகதி இந்த அமைப்பு பாரா­ளு­மன்­றத்தில் கூட்­டி­ணைக்­கப்­பட்­டது.

இந்த அமைப்­பினால் அநாதை பரா­ம­ரிப்பு நிதி­யு­தவி, உயர் கல்­விக்­கான புல­மைப்­ப­ரிசில், பள்­ளி­வா­சல்கள் மற்றும் வீடுகள் நிர்­மாணம், சுய­தொழில் உதவி என பல கோடி ரூபா பெறு­ம­தி­யான பல்­வேறு செயற்­திட்­டங்கள் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது.

இதே­வேளை, 1990ஆம் ஆண்டு முதல் தடை செய்­யப்­படும் வரை நூற்­றுக்­க­ணக்­கான பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு JASM இனால் வழங்­கப்­பட்டு வந்த உயர் கல்­விக்­கான புல­மைப்­ப­ரிசில் திட்­டமும் தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

“எமது அமைப்­பினை தடை செய்­வார்கள் என ஒரு போதும் நாங்கள் நினைக்­க­வில்லை. எனினும் ரமழான் மாதத்தின் முதல் நாள் எமது அமைப்­பினை தடை செய்­தமை மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது” என தடை­ செய்­யப்­படும் வரை அமைப்பின் பொதுச் செய­லா­ள­ராக பணி­யாற்­றிய ஏ.எல் கலீலுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

“எமது பக்க நியா­யங்­களை கூறு­வ­தற்கு எந்த சந்­தர்ப்­பமும் வழங்­கப்­ப­டா­ம­லேயே எமது அமைப்­பினை தடை செய்­துள்­ளனர்” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த அமைப்பு மாத்­தி­ர­மல்­லாமல், தடை செய்­யப்­பட்ட ஏனைய பல அமைப்­புக்­களும் நாட்டில் பல்­வேறு வகை­யான செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தி­ருந்­தன. இரத்த தானம் வழங்கல், வெள்ள நிவா­ரணப் பணி, கொவிட் நிவா­ரணப் பணி என பல­வற்­றினை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பிட முடியும்.

இரத்த தான நிகழ்­வு­களை தொடர்ச்­சி­யாக நாட­ளா­விய ரீதியில் ஏற்­பாடு செய்­த­மைக்­காக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்து பல தட­வைகள் விரு­துகள் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம்
பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சிலர் இணைந்து 1980.05.03ஆம் திகதி இந்த அமைப்பை உரு­வாக்­கினர். பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை கல்வி மற்றும் ஆன்­மிக ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கி­லேயே இந்த அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

சுமார் 41 வருட கால வர­லாற்­றினைக் கொண்ட இந்த அமைப்பின் தலை­வர்­க­ளாக இது­வரை சுமார் 23 பேரும் பொதுச் செய­லா­ளர்­க­ளாக சுமார் 30 பேரும் மாறி மாறிச் செயற்­பட்­டுள்­ளனர்.

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் கீழ் செயற்­பட்ட இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டு காலப் பகு­தியில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டது.

மாவ­னெல்லை சிலை உடைப்பு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள சாதீக் அப்­துல்லாஹ் இப்­றாஹீம் மற்றும் சாஹீத் இப்­றாஹீம் சகோ­த­ரர்கள் இந்த அமைப்பின் முறையே செயற்­குழு உறுப்­பினர் மற்றும் சப்­ர­க­முவ பிராந்­திய பொறுப்­பாளர் ஆகிய பத­வி­களில் செயற்­பட்­டுள்­ளனர்.

எனினும், குறித்த அமைப்பின் யாப்­பிற்கு முர­ணாக செயற்­பட்­டார்கள் என்ற கார­ணத்­தினால் கடந்த 2015/16ஆம் ஆண்டு காலப் பகு­தியில் குறித்த இரு சகோ­த­ரர்­களும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்­கத்தின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஈஸ்டர் தற்­கொலை தாக்­குதல்
இவ்­வா­றான நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் பெயர் தாங்­கிய குழு­வொன்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஈஸ்டர் தற்­கொலைத் தாக்­குதல் கார­ண­மாக 269 அப்­பாவி மக்­களின் உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­ட­துடன் சுமார் 500 பேர் வரை காய­முற்­றனர்.

இத­னை­ய­டுத்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்தில் பதி­வு­ செய்­யப்­பட்­டி­ருந்த 435 முஸ்லிம் அமைப்­புக்­களின் பதி­வு­களும் கடந்த 2019.09.23ஆம் திகதி இரத்துச் செய்­யப்­பட்டு வக்பு சபையின் கீழுள்ள முஸ்லிம் தர்ம நிதி­யத்தின் கீழ் பதி­வு­ செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதற்­க­மைய மேற்­படி பட்­டி­யலில் உள்ள முதல் நான்கு அமைப்­புக்­களின் பதி­வு­களும் இரத்துச் செய்­யப்­பட்­டன.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை
இவ்­வா­றான நிலையில் ஈஸ்டர் தற்­கொலை தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்டு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் 31ஆவது அத்­தி­யா­ய­மான பரிந்­து­ரை­களில் ‘தடை’ என்ற தலைப்பில் மூன்று விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. 

அவை­யா­வன:

1. இலங்­கையில் ஐ.எஸ் உள்­ளிட்ட மத அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களை தடை செய்­வ­தற்­கான சட்­டங்கள் அல்­லது விதி­மு­றைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

2. இலங்கை ஜமாத்தே இஸ்­லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்­பான ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் ஆகி­யன தடை செய்­யப்­பட வேண்டும். பொருத்­த­மான சட்டப் பிரி­வு­களின் கீழ் குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டுக்­களை தாக்கல் செய்யும் பொருட்டு இந்த அமைப்பின் செயற்­பா­டுகள் மற்றும் அதன் அங்­கத்­த­வர்கள் தொடர்பில் ஆழ­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்ட வேண்டும்.

3. பொது­ப­ல­சேனா அமைப்பு தடை செய்­யப்­பட வேண்டும்.

இதற்கு மேல­தி­க­மாக ஆணைக்­குவின் பரிந்­து­ரையில் ‘வஹா­பிசம்’ எனும் தலைப்பில் நாட்டில் வஹா­பிச கொள்கை தடை செய்­யப்­பட வேண்டும் எனவும் வஹா­பிச அமைப்­புக்­க­ளான அனைத்து தௌஹீத் அமைப்­புக்­களும் தடை செய்­யப்­பட வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அவற்றின் பெயர் விப­ரங்கள் எவையும் அதில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இஸ்­லா­மிய அமைப்­புக்­களின் தடை
நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாது­காப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டை­யன என்ற கார­ணத்தை முன்­வைத்தே இந்த அமைப்­புக்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் 2021ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த தடை­யினை அடுத்து குறித்த அமைப்­புக்­க­ளினால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த பல வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டுள்­ளன. இதில், JASM இன் சுமார் 80 இலட்சம் ரூபா பணம் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்த வங்கிக் கணக்­கொன்றும் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் தடை­செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் சில­வற்றின் கீழ் காணப்­பட்ட அசையும் மற்றும் அசையா சொத்­துக்கள் விட­யத்தில் அர­சாங்­கத்­தினால் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

எவ்­வா­றா­யினும் தடை செய்­யப்­பட்ட அனைத்து அமைப்­புக்­களின் அலு­வ­ல­கங்­களும் மூடப்­பட்­டுள்­ளன. அத்­துடன் 2015ஆம் ஆண்டு காலப் பகு­தியில் வக்பு சபையின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்ட காத்­தான்­குடி ஜாமிஉல் அதர் பள்­ளி­வாசல் மீது விதிக்­கப்­பட்ட தடை­யினை அடுத்து அப்­பள்­ளி­வாசல் முற்­றாக மூடப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்கள் யாரா­வது பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­க­ளாக செயற்­பட்டால் உட­ன­டி­யாக குறித்த பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்­யு­மாறு வக்பு சபை ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து சுமார் 12 பேர் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் பத­வி­களில் இருந்து இது­வரை இரா­ஜி­னாமாச் செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.
அடிப்­படை மனித உரிமை மீறல் மனு
இதே­வேளை, குறித்த தடை­யினை எதிர்த்து JASM, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் ஆகி­யன உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளன.

இதில், ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்­கத்­தினால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உயர் நீதி­மன்­றத்தில் எடுத்­துக்­ கொள்­ளப்­பட்டு எதிர்­வரும் செப்­டம்பர் 16ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, JASM இனால் தாக்கல் செய்­யப்­பட்ட மனு வியா­ழக்­கி­ழமை (05) உயர் நீதி­மன்­றத்தில் எடுத்­துக்­ கொள்­ளப்­பட்­ட­து.

எவ்­வா­றா­யினும் ‘‘முஸ்லிம் அமைப்­புக்கள் மீதான தடை தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும்’’ என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் தெரி­வித்தார்.

“இந்த தடையின் ஊடாக முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சிவில் இயக்­கங்­களை முடக்­கு­வ­தற்­கான மறை­முக திட்­ட­மொன்று காணப்­ப­டு­கின்­றது. இதன் பின்­ன­ணியில் பல வெளி­நாட்டு சக்­திகள் செயற்­ப­டு­கின்­றன” எனவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

இந்த தடை நீக்­கப்­ப­டா­வி்ட்டால் மேற்­படி அமைப்­புக்­களில் அங்­கத்­த­வர்­க­ளாக இருந்­த­வர்கள் மாத்­தி­ர­மல்­லாது அவர்­க­ளது குடும்­பத்­தி­னரும் கூட எதிர்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளுக்கு பய­ணிப்­ப­தற்­கான விசாக்­களை பெற்­றுக்­ கொள்­வதில் சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்டி வரலாம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தொழில் இழப்பு
இந்த அமைப்­புக்­களின் தடை கார­ண­மாக சுமார் 100 க்கு மேற்­பட்டோர் இன்று தொழில்­களை இழந்­துள்­ளனர். இவர்கள் குறித்த அமைப்­புக்­களின் அலு­வ­லக ஊழி­யர்கள், ஆசி­ரி­யர்கள், மார்க்கப் பிரச்­சார பணி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளாவார்.

அந்­நியச் செலா­வணி
அது மாத்­தி­ர­மல்­லாமல், குவைத் அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஸகாத் ஹவுஸ், பஸாயிர் செரிட்டி மற்றும் இந்­தியன் கொண்­டினன் கொமிட்டி ஆகிய மூன்று அமைப்­புக்­களின் நிதி­யு­த­வியின் ஊடா­கவே கடந்த பல தசாப்த கால­மாக அநாதை பரா­ம­ரிப்­புக்­கான நிதி­யு­தவித் திட்­டத்தை JASM அமைப்பு முன்­னெ­டுத்து வந்­தது. இதற்­காக இறுதி மூன்று வரு­டங்­களில் 3.1 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு நாட்டின் அந்­நியச் செலா­வ­ணிக்கு பாரிய பங்­க­ளிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது என JASM அமைப்பு சார்பில் உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, தடை செய்­யப்­பட்ட இந்த அமைப்­புக்­களில் சிலோன் தெளஹீத் ஜமா­அத்தின் பொதுச் செய­லாளர் அப்துர் ராசீக் தவிர வேறு எவ­ருக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தமது பக்க நியா­யங்­களைச் சொல்­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இந்த நிலையில், அனைத்து தெளஹீத் அமைப்­புக்­க­ளையும் தடை செய்­யு­மாறு சிபா­ரிசு செய்­யப்­பட்­டமை தொடர்பில் இந்த ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ராக செயற்­பட்ட நீதி அமைச்சின் முன்னாள் செய­லாளர் (ஓய்வு) திரு­மதி டப்­ளியூ.எம்.எம்.ஆர். அதி­கா­ரி­யினை நாம் தொடர்­பு­கொண்ட போது, இது தொடர்பில் எந்­த­வித கருத்­தி­னையும் கூற அவர் மறுத்­து­விட்டார்.

“ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் என்ற வகையில் அந்த அறிக்கை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு எந்த கருத்தும் என்னால் கூற முடி­யாது. தற்­போது குறித்த அறிக்கை பொது ஆவ­ண­மாக உள்­ள­மை­யினால் அதனை வாசித்து அறிந்­து­கொள்­ளுங்கள்” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் சரத் வீர­சே­கர
இதே­வேளை “தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் தொடர்பில் நாம் தனிப்­பட்ட ஆய்­வு­களை மேற்­கொண்­டி­ருந்தோம். இதன்­போது, குறித்த அமைப்­புக்கள் நாட்டில் அடிப்­ப­டை­வா­தத்­தினை பரப்­பி­ய­தற்­கான தெளி­வான ஆதா­ரங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்தே குறித்த அமைப்­புக்­களை தடை செய்தோம்” என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு குறித்த அமைப்­புக்கள் தடை செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்தால், அவர்­களின் தடை தொடர்பில் மீளாய்வு செய்­யப்­படும் என அவர் மேலும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, மேற்­படி பட்­டி­யலில் உள்ள முதல் ஆறு அமைப்­புக்­களும் தங்­களின் தடை­யினை மீளாய்வு செய்­யு­மாறு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­விற்கு எழுத்து மூலம் விசேட வேண்­டு­கோ­ளொன்­றினை முன்­வைத்­துள்­ளன.

எனினும் நாட்டில் ‘அடிப்­ப­டை­வாத்­தினை பரப்­பி­னார்கள்’ என முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டினை குறித்த ஐந்து தெளஹீத் அமைப்­புக்­களும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்­கமும் தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொது­ப­ல­சேனா
இதே­வேளை, ‘‘கல­கொட அத்தே ஞான­சார தேரர் பொதுச் செய­லா­ள­ராக செயற்­படும் பொது­ப­ல­சேனா அமைப்பின் நட­வ­டிக்­கைகள் சமய ஒற்­று­மைக்கும், அமை­திக்கும் அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளன என்­பது விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அபிப்­பி­ரா­ய­மாகும். இதனால் குறித்த அமைப்பு தடை செய்­யப்­பட வேண்டும்’’ என ஜனா­தி­பதி ஆணைக்­குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் ‘‘ஞான­சார தேரரின் சில செயற்­பா­டுகள் மற்றும் அவர் உரை­யாற்­றிய விதம் முஸ்லிம் இளை­ஞர்கள் திவீ­ர­வா­தி­க­ளாக மாறு­வ­தற்கு பங்­க­ளிப்பு செய்­த­துடன் சஹ்­ரா­னுடன் இணை­வ­தற்கும் வழி­கோ­லின’’ என ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐ.சீ.சி.பீ.ஆர் சட்­டத்தின் 56ஆம் பிரிவின் கீழ் மக­ர­ஹம (2013) மற்றும் அளுத்­கம (2014) ஆகிய நக­ரங்­களில் ஞான­சார தேரர் ஆற்­றிய உரைகள் தொடர்பில் குற்­ற­வியல் விசா­ர­ணை­களை ஆரம்­பிப்­ப­தற்கு விசா­ரணை ஆணைக்­குழு சட்­டமா அதி­ப­ருக்கு சிபா­ரிசு செய்­தது.

அர­சாங்கம்
எவ்­வா­றா­யினும், ஆணைக்­கு­ழுவின் இந்த சிபா­ரிசு தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் பொது பல சேனா அமைப்­புக்கு எதி­ராக எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எடுக்­காமல், முஸ்லிம் அமைப்­புக்­களை மாத்­திரம் தடை செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது.

இது தொடர்பில் அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ளரும் ஈஸ்டர் குண்டுத் தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை ஆய்வு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை உப குழுவின் உறுப்­பி­ன­ரு­மான அமைச்சர் ரமேஷ் பத்­தி­ர­ன­விடம் வின­வி­ய­தற்கு,

“குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை விரிவாக ஆராய்ந்த அமைச்சரவை உப குழு, பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யுமாறு எந்தவித சிபாரிசினையும் முன்மொழியவில்லை.
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஏனைய சட்ட அமுலாக்கல் துறையினர் ஆணைக்குழுவின் அறிக்கையினை புலனாய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதி முடிவினை அமைச்சரவை உப குழு காத்துக்கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பொதுபலசேனா அமைப்பினை தடை செய்வதா இல்­லை­யா என்பது தொடர்பான இறுதி தீர்மானமொன்றை மேற்கொள்ளும்” என்றார்.
மனித உரிமைசெயற்பட்டாளரின் கருத்­­து
இதே­வேளை, நாட்டில் தடை செய்­யப்­பட்ட முஸ்லிம் அமைப்­புக்­களை பொறுத்­த­வரை தடை செய்­யப்­பட்­ட­தற்­கான கார­ணங்­களை வெளிப்­ப­டை­யாக ஆதா­ரங்­க­ளுடன் தெரி­யப்­ப­டுத்­த­வில்லை என மனித உரிமை செயற்­பாட்­டாளர் அம்­பிகா சற்­கு­ண­நாதன் தெரி­வித்தார்.

“ஆகையால் இச்­செயல் இந்­நி­று­வ­னங்­களின் அங்­கத்­த­வரின் சட்­டத்தில் வரை­ய­றுக்­கப்­பட்ட உரிய செயல்­முறை உரி­மை­களை (Due Process Rights) மீறு­கி­றதா என்ற கேள்வி எழு­கின்­றது” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

“ஒரு நிறு­வ­னத்தை தடை செய்­வ­தென்றால் அது சட்­டத்தில் ஸ்தாபிக்­கப்­பட்­ட ­தெ­ளி­வான ஒரு வழி­மு­றை­யி­னா­லேயே செய்­யப்­பட வேண்டும். மேலும், தடை செய்­வ­தற்­கான கார­ணங்கள் தெளி­வா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும்” என இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்னாள் உறுப்­பி­ன­ரான அம்­பிகா தெரி­வித்தார்.

இல்­லா­விடில் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­களின் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­கேற்ப நிறு­வ­னங்­களை தடை செய்­யலாம். முக்­கி­ய­மாக, தடை செய்­யப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு அத்தடையை மேல் முறையீடு செய்து சவாலுக்­குட்­ப­டுத்­த வழிமுறை இருக்க வேண்டும்’’ என அவர் மேலும் கூறினார்.

Vidivelli

No comments:

Post a Comment