தகாத மனைவியின் 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று ஹிங்குரங்கொட பிரதேச ஒரு வீட்டில் வைத்து கணவன் மனைவி போல் நடந்து கொண்ட 30 வயது திருமணமான விமானப்படை சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 30 வயது சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபரான விமானப்படை சிப்பாய் தலாவ பகுதியைச் சேர்ந்த திருமணமான 42 வயது பெண் ஒருவருடன் தகாத உறவை பேணி வந்துள்ளதாகவும் அங்கு சென்று வரும் போது 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் 15 வயது சிறுமி வீட்டிலிருந்து திடிரென்று காணாமல் போனதை இட்டு அது தொடர்பில் தாய் தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி ஹிங்குரங்கொட பிரதேச வீட்டில் தடுத்து வைத்திருந்த நிலையில் கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நிருபர்
No comments:
Post a Comment