காபூல் விமான நிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - எச்சரித்தார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

காபூல் விமான நிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - எச்சரித்தார் ஜோ பைடன்

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் பெயரிடப்படாத இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு அருகில் "குறிப்பிட்ட, நம்பகமான அச்சுறுத்தல்" பற்றி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது.

அதேநேரம் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக் கொண்டது.

இதனிடையே வெள்ளை மாளிகையில் சனிக்கிழமை பிற்பகல் ஜோ பைடன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார்.

அதில், கபாபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அடுத்த 24-36 மணி நேரத்தில் ஒரு தாக்குதல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எனது தளபதிகள் எனக்கு தகவல்கள் அளித்ததாக கூறினார்.

காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 169 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள், விமான நிலைய குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய அரசை அமெரிக்கா சனிக்கிழமை தாக்கியது.

பழிவாங்கும் விமானத் தாக்குதலில், அமெரிக்க இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பின் ஒரு தளத்தை குறிவைத்தது.

ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் எந்த விதமான பொதுமக்களின் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பதை பென்டகனின் ஆரம்ப அறிக்கைகள் உறுதிபடுத்தின.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.

இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

No comments:

Post a Comment