கொவிட்-19 வைரஸின் மிகவும் கடுமையான மற்றும் ஆபத்தான மாறுபாடுகள் தோன்றுவதற்கான வலுவான வாய்ப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் சவலானதாக அமையலாம் என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் எட்டாவது அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, உலகளவில் தொற்றுநோய் உலகளவில் ஒரு சவாலாக உள்ளது என்று நிபுணர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளனர்.
"புதிய மற்றும் சாத்தியமான மிகவும் ஆபத்தான கொவிட் மாறுபாடுகளின் வெளிப்பாடு மற்றும் உலகளாவிய பரவலுக்கான வலுவான சாத்தியக் கூறுகளை குழு அங்கீகரித்தது, அவற்றை கட்டுப்படுத்த இன்னும் சவாலானதாக இருக்கலாம்" என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலுக்கு மத்தியில், கொவிட்-19 தொடர்ந்து நான்கு வகையான பரவல்களை உருவாக்கி வருவதாகவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்தும் தொற்றுநோய் இன்னும் “ஒரு அசாதாரண நிகழ்வாக அமைகிறது” என்றும் ஒருமனதாக குழு ஒப்புக் கொண்டது.
தற்போதைய தொற்றுநோய்க்கு உலகம் இன்னும் பதிலளிக்கும் அதே வேளையில் புதிய உயிரியல் நோய்கள் தோன்றும் அபாயத்தையும் இந்த குழு அறிக்கையில் வலியுறுத்தியது.
இதனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தடுப்பூசிகளின் காரணமாக, செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவீதமானோருக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து நாடுகளுக்கும் குழு அழைப்பு விடுத்துள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
அதேநேரம் உலக சுகாதார பாதுகாப்பில் ஒரு புதிய அணுகுமுறையை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment