வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப் பொருளுடன் ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப் பொருளுடன் ஐவர் கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை செம்மண்ஓடை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வியாபாரத்துக்காக மன்னார் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 850 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை வாழைச்சேனை பகுதியிலுள்ள மற்றொரு வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் 202 கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதை பொருளுடன் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்வர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment