இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலே குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர் குருனல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment