மேலும் 90,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

மேலும் 90,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 90,000 டோஸ் Pfizer கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதிகள் இன்று (26) அதிகாலை விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 26,000 Pfizer கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் திகதி மேலும் 26,000 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்தன. அதன் பின்னர் கடந்த ஜூலை 19ஆம் திகதி மற்றுமொரு 90,000 தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்திருந்தன.

அதற்கமைய, தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் இதுவரை 212,200 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment