2021/2022 ஆண்டுகளுக்கான இலங்கை கிரிக்கட் அணிக்கான ஒப்பந்தப்பட்டியலை இலங்கை கிரிக்கட் அணி வெளியிட்டுள்ளது.
சிரேஷ்ட வீரர்கள், A அணி மற்றும் வளர்ந்து வரும் வீரர்களென 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மூன்று குழுக்களும் எதிர்வரும் இந்திய அணிக்கெதிரான தொடர் உட்பட நடைபெறவுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களுக்காக தயார்நிலையில் வைக்கும் பொருட்டு தம்புள்ளை மற்றும் கொழும்பில் உள்ள உயிர் பாதுகாப்பு வலயங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 26 வீரர்கள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பயிற்சிகளை கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் ஏனைய 13 பேரும் 2ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளனர்.
அண்மையில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் பலரது அவதானத்தையும் பெற்ற இளம் வீரர் மொஹமட் சிராஸ், A அணியின் கீழ் ஒப்பந்தம் வழங்கப்பட்டு தற்போது ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
வைத்தியர் அஷாப் முஹம்மட்
No comments:
Post a Comment