இலங்கையில் 3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி : இதுவரை 87 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் - இரு டோஸ் பெற்றவர்கள் சுமார் 20 இலட்சம் பேர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

இலங்கையில் 3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி : இதுவரை 87 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் - இரு டோஸ் பெற்றவர்கள் சுமார் 20 இலட்சம் பேர்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, கடந்த 3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (28) மாத்திரம் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு (417,815) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (28)
Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 344,458 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 32,288 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 40,912 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Moderna தடுப்பூசியை முதல் டோஸாக 157 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
1ஆவது டோஸ் - 925,242 பேர்
2ஆவது டோஸ் - 385,885 பேர்

Sinopharm:
1ஆவது டோஸ் - 6,769,468 பேர்
2ஆவது டோஸ் - 1,593,996 பேர்

Sputnik-V:
1ஆவது டோஸ் - 159,081 பேர்
2ஆவது டோஸ் - 14,503 பேர்

Pfizer:
1ஆவது டோஸ் - 155,017 பேர்

Moderna:
1ஆவது டோஸ் - 709,625பேர்

அந்த வகையில் இதுவரை 87 இலட்சத்து 18 ஆயிரத்து 433 பேருக்கு (8,718,433) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

19 இலட்சத்து 94 ஆயிரத்து 384 பேருக்கு (1,994,384) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment