யாழில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரம் - அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

யாழில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரம் - அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ் பரியோவான் கல்லூரி, கைதடி உட்பட பல்வேறு தடுப்பூசி வழங்கும் மையங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோருடன் கள நிலைரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், யாழ். மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகம் அடையளம் காணப்பட்ட பகுதிகளில் 11 இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை மும்மடங்காக மாவட்டத்தின் பல்வேறு பிரதேங்களுக்கும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுப் போக்குவத்து சேவைகளில் பணியயாற்றுவோர் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் அமைந்துள்ள தடுப்பூசி மையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் தொடர்பாக நேற்று ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாணம் மாத்திரமன்றி வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தினை விஸ்தரிப்பது தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ் மாவட்டத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படும் பெரும்பாலான நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர், அங்கிருந்த சுகாதாரத் தரப்பினர் மற்றும் மக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொண்டதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment