சாகர எம்.பி.யுடன் கோட்டா, மஹிந்த, பஷில் உரையாடல் : விரைவில் விசேட அறிவிப்பொன்று வெளியாகும் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 20, 2021

சாகர எம்.பி.யுடன் கோட்டா, மஹிந்த, பஷில் உரையாடல் : விரைவில் விசேட அறிவிப்பொன்று வெளியாகும்

(ஆர்.ராம்)

பொதுஜன பெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சித் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அதுபற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

எனினும், இதுபற்றி சாகர காரியவசத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பேசினார்கள்” என்று மட்டும் குறிப்பிட்டார். அதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அவர் தயாரில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, தற்போதைய முரண்பாட்டு நிலைமைகள் மற்றும் அடுத்த கட்டமாக எவ்விதமான விடயங்கள் நடைபெறப்போகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவேன் என்றுஅவர் குறிப்பிட்டார்.

அதற்கு உகந்த காலமும் நேரமும் நிச்சயமாக அடுத்து வரும் காலப்பகுதியில் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment