இத்தாலிய பிரதமரும் இரு வேறு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இத்தாலிய பிரதமரும் இரு வேறு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா தடுப்பபூசிகளை போட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், முதலாம் கட்ட தடுப்பூசியாக மரியோ டிராகிக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டாம் கட்டம் கொரோனா தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கோரியர் டெல்லா செரா என்ற அந்நாட்டு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் சான்ஸ்லர் 66 வயதான ஏஞ்சலா மேர்கெலும் முதலாவதாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகாவும், இரண்டாவதாக மொடர்னா தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இரு ஐரோப்பிய தலைவர்கள் இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment