கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதினெட்டு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதினெட்டு பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று பதினெட்டு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை எண்பத்தியொரு (81) நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி பதினெட்டு (18) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment