வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் நேற்று மரணமடைந்திருந்தார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான பெண்மணிக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment