2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மட் சாதிகீன் பாத்திமா புஸ்ரா வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இம்மாணவி வர்த்தகம் ஏ, பொருளியல் ஏ, கணக்கியல் ஏ என மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்று பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இம்மாணவி கண்டி பூருணவத்தையைச் சேர்ந்த முஹமட் சாதிகீன் மற்றும் கதீஜா தம்பதிகளின் புதல்வியுமாவார்.
மாவத்தகம தினகரன் நிருபர்
No comments:
Post a Comment