குருணாகல், காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது.
மேல் மாகாணத்துக்கு வெளியே கொவிட்19 தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதாக கொவிட்19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த 5 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்றும் கூறினார்.
தொற்று நோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்
கடந்த மார்ச் மாதமும் சீனா 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment